search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி நிகழ்ச்சிகள்"

    • ஏப்ரல் 1-ந் தேதி சிவகாசி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.
    • ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகிற 31-ந் தேதி ராஜபாளையம் வருகிறார்.

    ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்கிறார். காலை 11மணிக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியிலும், மாலை 4மணிக்கு சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி 60-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது.

    ×